ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் கும்பாபிஷேகம்

ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் கும்பாபிஷேகம்

ஒசூர்:

கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள  ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோவில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளிருக்கும்  ஸ்ரீ கற்பக வினாயகர் மற்றும் ஸ்ரீ ருக்மணி,  ஸ்ரீ சத்யபாமா  சமேத ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக திருவிழா கடந்த 28-ம் தேதி கரிகோல் விழாவுடன் துவங்கியது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மஹா கும்பாபிஷேக விழாவில், கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், கோபுர கும்பகலச ஹோமம், பூர்ணாதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாக சாலை பூஜைகள் வேத விற்பனர்களால் நடத்தப்பெற்றது.

இதனைத் தொடர்ந்து, புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, மங்கள வாத்திம் முளங்க பக்தர்களின் கரகோசத்துடன்  வேத விற்பனர்களால் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி மஹாகுப்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இதன் பின்னார் கோவிந்தா, கோவிந்தா எனும் கரகோசத்துடன் தரிசனம் செய்த பக்தர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது, இதன் பின் ஸ்ரீ வினாயகர் மற்றும் ஸ்ரீ ருக்குமணி தாயார் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அரங்கார தீபாராதணைகள் நடைபெற்றது.

இந்த குப்பாபிஷேகத்தைக்காண மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டுவந்து சாமி சரிசனம் செய்து வழிப்பட்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் நஞ்சப்பா கவுண்டர் மற்றும் காட்டிநாயனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 109 குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்