முதல்வரை சந்தித்த விளையாட்டு வீரகள்..!

முதல்வரை சந்தித்த விளையாட்டு வீரகள்..!

சென்னை:

சர்வதேச குதிரை தடை தாண்டும் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

போர்ச்சுக்கல் பார்சிலோனாவில் நடந்த சர்வதேச குதிரை தடை தாண்டும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சபரி விகாஸ், அகில் ரித்விக், அவந்திகா ஆகியோர் வெற்றி பெற்றனர். பயிற்சியாளர் சரவணன் கந்தசாமி என்பவர் 3வது இடத்தை பிடித்தார்.

வெற்றிபெற்று திரும்பிய 3 பேரும், தங்கள் குதிரைகளுடன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்