மருத்துவனைகளில் திடீர் ஆய்வு நடத்த குழு!

மருத்துவனைகளில் திடீர் ஆய்வு நடத்த குழு!

மதுரை:

தமிழகத்தின் 13 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்த மதுரை ஐகோர்ட் கிளை குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைளின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து, மதுரை நீதிமன்ற கிளைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் ஏதேனும் 2 மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் திடீரென அங்கு சென்று ஜெனரேட்டர், செயற்கை சுவாசங்கள் போன்றவை சரியான செயல்பாட்டில் உள்ளதா என சோதனை செய்யவேண்டும். இதுசம்பந்தமான ஆய்வறிக்கையை வரும் ஜூலை 23ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் மின்தடை காரணமாக 5 பேர் உயிரிழந்தது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்