திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 2,500 சிறப்பு பேருந்து இயக்கவுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, வரும் 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரண தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
வரும் 1ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதிலும் இருந்து 2,500 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.