சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வியில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போர் தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி கூறுகையில், டிசம்பர் 2019, மே 2020 ஆகிய பருவத் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சிபெற்றுக்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தேர்வு மூலம் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.