மெல்ல மெல்ல மீளும் கோவை

மெல்ல மெல்ல மீளும் கோவை

அமைச்சர் எஸ்.பி வேலுமணி கோவையில் உள்ள சுண்டக்காபுத்தூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ” கொரோனா வைரஸ் தோற்று தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. இப்போது மேலும் 20 நடமாடும் பரிசோதனை மையம் மற்றும் வாகனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 5 இலட்சத்திற்கும் மேல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர பகுதிகள் 5 மண்டலமாக பிரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர், வருவாய் ஆய்வாளர்கள் தலைமையில் நோய்பரவல் கட்டுப்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ” என்று கூறினார்.

மேலும், கொரோனாவின் தாக்கத்தில் இருந்து கோவை மாவட்டம் விரைவில் மீளும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்