‘‘பழைய நடைமுறையே தொடரும்’’ – தெற்கு ரயில்வே

‘‘பழைய நடைமுறையே தொடரும்’’ – தெற்கு ரயில்வே

சென்னை:

ரயில்நிலைய அதிகாரிகளின் உரையாடல்கள் பழைய நடைமுறையிலேயே தொடரும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ரயில்நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் உரையாடல் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே உத்தரவிட்டிருந்தது.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த உத்தரவை உடனடியாக திரும்பப்பெற கோரி, தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, சேகர்பாபு உள்ளிட்டோர் தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் அலுவல் சார்ந்த உரையாடல்களில் பழைய நடைமுறையே தொடரும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்