பலாத்காரம் செய்த மகன்.. வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டிய தாய்

பலாத்காரம் செய்த மகன்.. வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டிய தாய்

ராய்ப்பூர்:
சத்தீஷ்கர் மாநிலத்தில் இளம் பெண் ஒருவரை மகன் பலாத்காரம் செய்துள்ளார். இதனை மறைந்திருந்து தாய் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

19 வயதான பெண்ணுக்கு வாலிபர் மீது அளவு கடந்த காதல் வந்துள்ளது. வாலிபரும் பெண்ணை காதலித்துள்ளான்.

ஒருநாள் அப்பெண்ணை தன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பி வீட்டுக்கு சென்ற பெண்ணை பார்த்ததும் இளைஞனின் அம்மா கட்டி அணைத்து கொண்டுள்ளார்.

முதல்முறையா வீட்டுக்கு வந்திருக்கே என்று சொல்லி ஸ்வீட் தந்துள்ளார். இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த அந்த ஸ்வீட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து மயங்கி விழுந்துள்ளார் இளம்பெண்.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணை வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார். இதனை மறைந்திருந்து அம்மா வீடியோ எடுத்துள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கு பின்பு மயக்கம் தெளிந்து பெண் எழுந்து உட்கார்ந்துள்ளார். வாலிபரின் அக்காவும், அக்கா வீட்டுக்காரரும் வீடியோவை பெண்ணிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டில் இருந்த ரூ.4 லட்சத்தை கும்பலிடம் கொடுத்துள்ளார்.

வீட்டில் வைத்திருந்த பணம் எங்கே என்று மகளிடம் தந்தை கேட்டபோதுதான் நடந்த சம்பவத்தை சொல்லி பெண் அழுதுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் தாயையும்-மகனையும் கைது செய்துள்ளனர்.

மகன் பலாத்காரம் செய்ததை பெற்ற தாயே வீடியோ எடுத்த சம்பவம் சத்தீஷ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்