பாலிடோங்லே:
சோமாலியா நாட்டில் உள்ள அமெரிகக்க ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நேற்று பயங்கரத் தாக்குதல் நடத்தனர்.
சோமாலியாவின் பாலிடோங்லே நகரில் அமைந்துள்ள அமெரிக்க முகாம்கள் மற்றும் ஐரோப்பிய ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்து இதுவரை வெளியிடவில்லை. இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கப் படைகள் நடத்திய இரண்டு வான்வழித் தாக்குதலில் அல் ஷபாப் தீவிரவாதிகள் 10 பேர் பலியாகினர் என்றும் தீவிரவாதிகளின் வாகனங்களும் சேதமடைந்தன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.