ஒசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதி எப்பொழுதும் குளிர்ந்த நிலை நிலவினாலும் டிசம்பர்,ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு காரணமாக குளிரின் அளவு அதிகரித்து காணப்படுகிறது.
இன்று வழக்கத்தை விட அதிகப்படியான பனிப்பொழிவு இருந்து வருவதால் மழையை போன்று பனி கொட்டி வருகிறது. முன்னால் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனி வெள்ளை போர்த்தியது போல் காணப்படுவதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டும், ஒலி எழுப்பியவாறு வ £கனங்களை இயக்கி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கான பள்ளி, கல்லூரி தொழிற்சாலைகள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், பனிப்பொழிவு மழையை போல கொட்டி வருவதால் குளிரை தாங்க ஸ்வெட்டர், தலைப்பாகை உள்ளிட்டவைகளை அனிந்து ஒசூர் சுற்றுபகுதியினர் அவதிக்குள்ளாகி உள்ளனர்.