குழந்தைகளின் படுக்கையில் நாகப்பாம்பு!

குழந்தைகளின் படுக்கையில் நாகப்பாம்பு!

கடலூர்:

கடலூர் அருகே குழந்தைகளின் படுக்கையின் அடியில் நாகப்பாம்பு இருந்ததால் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரை அடுத்த சோனங்குப்பம் பகுதியில் வசிக்கும் பிச்சாண்டி என்பவரது வீட்டில், அவரது குழந்தைகள் படுக்கும் மெத்தையின் அடியில் ஏதோ நெளிவதாக குழந்தைகள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்று பார்த்த பிச்சாண்டி, நாகப்பாம்பு ஒன்று தலைகாட்டியுள்ளது. அதனை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே பாம்பு பிடிப்பவருக்கு தகவல் கொடுத்து, அந்த பாம்பை மீட்டனர்.

சுமார் 3 அடி நீள நாகப்பாம்பை எந்தவித காயமும் இன்றி பாம்பு படி வீரர் செல்லா மீட்டார். இது வெயில் காலம் என்பதால் குளிர்ந்த இடத்தை தேடி வீடுகளுக்குள் பாம்புகள் வர வாய்ப்புள்ளதாக செல்லா தெரிவித்தார்.

வீட்டின் படுக்கறையறைக்குள்ளே பாம்பு வந்ததைக் கண்டு சோனங்குப்பம் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்