ஷூவில் கொடிய பாம்பு; குடும்பமே அதிர்ச்சி

ஷூவில் கொடிய பாம்பு; குடும்பமே அதிர்ச்சி

கண்ணூர்:

கேரளாவில் கொடிய விஷப்பாம்பு ஒன்று ஒரு பெண்ணின் ஷூவுக்குள் இருந்ததால் குடும்பமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கேரளாவின் கண்ணூர் மாவட்டம் மாலூர் கிராமத்தில் வசிப்பவர் ஜசீரா. இவர் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றி வருகிறார். பணி முடிந்து வீடு திரும்பியபின் தனது காலணியை கழற்றியுள்ளார். மீண்டும் காலையில் அந்த காலணியை எடுத்துள்ளார். அப்போது, ஷூவின் உள்ளே இருந்த சாக்சை எடுத்தபோது பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளது.

அந்த பாம்பு வித்தியாசமானதாக இருந்தது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர். அந்த பாம்பு ‘சட்டித்தலையன்’ என்ற வகையை சேர்ந்தது என்றும், அதிக விஷத் தன்மை வாய்ந்தது.

மேலும், அது ஒரே நேரத்தில் பல முறை விஷத்தை செலுத்தும். அழுத்தமாக கடித்து பல் மூலம் விஷத்தை உடலில் இறக்கக்கூடியதாம். இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்