அகர்தலா:
திரிபுராவில் இறைச்சிக்காக மலைப்பாம்பை கூறுபோடும் பழங்குடியினரின் வீடியோ தற்போது வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினர் அதிகம் வசித்துவரும் நிலையில், அறிவியலும் நாகரீகமும் வளர்ந்தாலும் அவர்கள் தங்கள் பாரம்பரியத்தையே கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், திரிபுராவில் பழங்குடியின மக்கள் இறைச்சிக்காக மலைப்பாம்புகளை துண்டு துண்டாக வெட்டிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.