திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தமிழக பக்தர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட 6 போலீசா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை சேர்ந்த டில்லிபாபு, தனது உறவினர்களுடன் கடந்த 2 நாட்களுக்குமுன் திருப்பதி சென்றார். அங்கு அடிவாரத்தில் அலிபிரி சோதனை சாவடியில் அவரது உடமைகளை சிறப்பு அதிரடி படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, டில்லிபாபுவிடம் புகையிலை பொருட்கள் இருந்ததாகவும், அதுகுறித்து டில்லிபாபுவுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து டில்லிபாபுவை அதிகாரிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்த வீடியோ செய்தி ஊடகங்களில் பரவியது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 போலீசாரை பணியிடமாற்றம் செய்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.