பெங்களூரு:
விக்ரம் லேண்டரின் சிக்னல் துண்டிப்பால் கண்ணீர் விட்டு அழுத சிவனை, பிரதமர் மோடி கட்டித்தழுவி ஆறுதல் கூறினார்.
‘சந்திரயான் 2’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது கடைசி நேரத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை நேரில் காண பிரதமர் மோடி பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்திருந்தார். கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்னல் பழுதை விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில், சிக்னல் பழுதால் இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது பிரதமர் மோடி அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.
#WATCH PM Narendra Modi hugged and consoled ISRO Chief K Sivan after he(Sivan) broke down. #Chandrayaan2 pic.twitter.com/R1d0C4LjAh
— ANI (@ANI) September 7, 2019