காரைக்குடி:
சிவகங்கை அருகே குழந்தையுடன் எதிரில் வந்த ஆவேச காளை தாண்டிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த சிராவயல் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இங்கு தொழு என்ற வாடிவாசலில் மாடுகளை அவிழ்த்து விடும் முன்பாகவே, வாகனங்களில் மாடுகளை அழைத்து வருவோர் அவற்றை வயல்வெளி, கண்மாய் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அவிழ்த்து விடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இதனால் பலர் காயம் அடைவதாகவும் புகார் எழுந்துள்ளது. இவ்வாறு வாகனத்தில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று எதிரில் வந்த தாயையும் மகனையும் முட்டாமல் கடந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.