சிவகங்கை:
சிவகங்கையில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் சிவகுரு துரைராஜை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை பொதிகை நகரை சேர்ந்தவர் சிவகுரு துரைராஜ் 61, இவர் மதுரை முக்கு பகுதியில் நர்ஸிங் பயிற்சி மற்றும் கேட்டரிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
மேலும், பாஜகவில் சிவகங்கை மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராகவும் உள்ளார்.
இவரது கல்லூரியில் 19வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார்.
அவரிடம் தன்னிடம் சாதகமாக நடந்து கொண்டால், கூடுதலான உள்ளீட்டு மதிப்பெண் அளிப்பதாக மாணவியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
இது பற்றி மாணவி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் சிவகங்கை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை தொடர்பந்து பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவகுரு துரைராஜை போலீசார் கைது செய்தனர்.