சென்னை:
பொது இடத்தில் நடிகை ஸ்ரேயா தன்னுடைய கணவருக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்தது அனைவரையும் அதிரவைத்தது.
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரேயா, ஒரு கால கட்டத்தில் மார்க்கெட் சறுக்கியது. அப்போது திடீரென வெளிநாட்டு காதலர் ஆண்ட்ரூ கோர்சேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது தமிழில் ‘நரகாசூரன்’ படத்தையடுத்து, ‘சண்டைக்காரி’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரேயா, அனைவரையும் கவர்ந்தார்.
அப்போது புகைப்படக் கலைஞர்கள் அவரை சூழ, தன்னுடைய கணவருக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்தது அங்கிருந்தவர்களை அதிரவைத்தது.