மும்பை:
நடன நிகழ்ச்சியின்போது தவறி விழுந்ததில் நடிகை ஸ்ரத்தா ஆர்யா காயமடைந்தார்.
தமிழில் சில படங்களில் நடித்தவர். இந்தி நடிகை ஸ்ரத்தா ஆர்யா, தெலுங்கு கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது நாச் பலியே என்ற டிவி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகின்றார்.
இதற்கான படப்பிடிப்பு தனது ஆண் நண்பர் ஆலம் மக்காருடன் கடந்த சில தினங்களுக்கு முன் கலந்து கொண்டார்.
அப்போது இருவரும் நடனமாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஸ்ரத்தா கீழே விழுந்துள்ளார்.
இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.
தற்போது நலமாக உள்ளேன் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.