கமல் மீது செருப்பு வீச்சு..! திருப்பங்குன்றத்தில் பரபரப்பு..!!

கமல் மீது செருப்பு வீச்சு..! திருப்பங்குன்றத்தில் பரபரப்பு..!!

மதுரை:

இடைத்தேர்தல் நடக்கவுள்ள திருப்பரங்குன்றம் தொகுதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் மீது செருப்பு வீச்சால் பரபரப்பு நிலவி வருகிறது.

அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில், இந்து மதத்தைப்பற்றி கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சைத்தொடர்ந்து பா.ஜ., உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரித்துள்ளனர். அவர் மீது வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கமல்ஹாசனை நோக்கி செருப்பு வீசப்பட்டுள்ளது.
செருப்பு வீசிய நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்