பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார், சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தவர்.
இந்நிலையில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் முதுகுவலி காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.