நோன்பு இருந்துகொண்டே விளையாடிய ஐபிஎல் வீரர்கள்!

  • In Sports
  • May 10, 2019
  • 240 Views
நோன்பு இருந்துகொண்டே விளையாடிய ஐபிஎல் வீரர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இப்தார் நோன்பு இருந்துகொண்டே ஐதராபாத் வீரர்கள் விளையாடியதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில், ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான எலிமனேட்டர் போட்டியில் இப்தார் நோன்பு இருந்துகொண்டே ஐதராபாத் வீரர்களான ரஷித்கான் மற்றும் முகமது நபி விளையாடியதாகவும், அனைவருக்கும் தன்னுடைய ரமலான் வாழ்த்துக்கள் எனவும், இவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். ஒரு நாள் முழுவதும் நோன்பு இருந்துகொண்டு விளையாடுவது எளிதல்ல எனவும் ஷிகர் தவான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்ததுடன், இந்திய வீரர்கள் நோன்பு துறந்த படங்களையும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்