லண்டன்:
உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இந்திய அணியிலிருந்து ஷிகர் தவான் விலகியுள்ளார்.
கடந்த 9ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் சதம் அடித்து விளாசினார். அப்போது இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது.
இந்த காயம் குணமடைய 3 வாரங்கள் ஆகும் என இந்திய அணியின் மருத்துவர் குழு தெரிவித்தது. ஆனால், இன்னும் ஷிகர் தவான் குணமடையாத காரணத்தால், உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து அவர் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக இந்திய அணியில் ரிஷப் பந்தை சேர்க்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.