புதுடெல்லி:
குடியுரிசை சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள் நம்மை தவறாக வழிநடத்துகின்றன என ஷியா மத குரு மவுலானா கல்பே ஜாவாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அசாமில் மட்டுமே என்ஆர்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அமல்படுத்தப்படவில்லை. அதில் என்னென்ன விதிகள் சேர்க்கப்படும் என்பது கூட நமக்கு தெரியாது. சிஏஏ., மற்றும் என்ஆர்சி., இரண்டும் வெவ்வேறு என தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் கட்சிகள் நம்மை தவறாக வழிநடத்துகின்றன எனவும், இஸ்லாமியர்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.