சைக்கிள் செயின், கம்பியால் சீரியல் கொலை..! அதிர்ச்சி சம்பவம்..!!

சைக்கிள் செயின், கம்பியால் சீரியல் கொலை..! அதிர்ச்சி சம்பவம்..!!

கல்னா:

மேற்குவங்க மாநிலத்தில் சைக்கிள் செயின், இரும்பு கம்பியால் சீரியல் கொலை செய்த நபரால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் புதுல் மாஜி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் சந்தேகத்திற்கிடமான நபரை கைது செய்து விசாரித்துள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கமருசமான் என்ற 42 வயதான நபர் ஒரு சீரியல் கொலைகாரர் என்பது தெரியவந்துள்ளது. புதுல் மாஜி கொலைக்கும் தொடர்பு தெரியவந்த நிலையில், தொடர்ந்து நடந்த விசாரணையில், புதுல் மாஜிக்கு முன்பாக 4 பெண்களை கமருசமான் கொலை செய்திருக்கிறார்.

இவர், பெண்கள் தனியாக இருப்பதை நோட்டமிட்ட பிறகு மதிய நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து தான் மின் கணக்காளர் எனக்கூறி சமயம் பார்த்து சைக்கிள் செயின் மற்றும் இரும்புக் கம்பியால் பெண்களை தாக்கி அவர்களை கொலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இளம்பெண்களை கொன்றபின் வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையும் அடித்தது தெரியவந்துள்ளது. ஆனால், திருடும் நோக்கில் இதை செய்ததாக தெரியவில்லை. எதற்கு பெண்களை தொடர்ச்சியாக கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்