‘‘ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறப்பில் மாற்றமில்லை’’ -அமைசச்சர் செங்கோட்டையன்

‘‘ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறப்பில் மாற்றமில்லை’’ -அமைசச்சர் செங்கோட்டையன்

சென்னை:

தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறப்பில் மாற்றமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடும் வெயில் நீடித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என செய்திகள் பரவின. இதனால், பெற்றோர்களிடையே ஜூன் 3ம் வாரத்திற்கு தள்ளிபோகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும். எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்