தமிழா? ஆங்கிலமா? மொழிப்பாடம் செய்தி தவறானது: செங்கோட்டையன்

தமிழா? ஆங்கிலமா? மொழிப்பாடம் செய்தி தவறானது: செங்கோட்டையன்

சென்னை:
பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்பில், தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் ஏதாவது ஒரு மொழியில் பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம் என வெளியான செய்தி முற்றிலும் தவறானது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளில் மாணவர்களின் விருப்ப அடிப்படையில் தமிழ் அல்லது ஆங்கில மொழி பாடத்தை ஏதாவது ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்து உள்ளதாக செய்தி வெளியானது முற்றிலும் தவறானது.

மொத்த மதிப்பெண் 600லிருந்து 500 ஆக குறைக்கும் திட்டமும் இல்லை. இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. வழக்கமான ஆறு பாடங்களும் மாணவர்களுக்கு கற்பிக்கும் நடைமுறையை பள்ளிக்கல்வித்துறை பின்பற்றும் என அவர் உறுதியளித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்