தனியார் பள்ளிகளுக்கு செங்கோட்டையன் எச்சரிக்கை!

தனியார் பள்ளிகளுக்கு செங்கோட்டையன் எச்சரிக்கை!

கூடுதல் கட்டணம் குறித்து பெற்றோர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூரில் தமிழக அரசின் விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சு வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு 640 பயனாளிகளுக்கு நாட்டு கோழி குஞ்சுகளை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த அரசு பள்ளியிலும் மாணவர்களிடம் ஒரு ரூபாய் கூட கட்டணம் வசூலிப்பதில்லை எனக் கூறினார்.

நீட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்