5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. சீமான் கண்டனம்

5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. சீமான் கண்டனம்

சென்னை:
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை கொண்டு வந்திருப்பது மாணவர்கள் கல்வியை பாதியில் நிற்பதற்கு வழிவகுக்கும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு தமிழக அரசு பொதுத்தேர்வு முறையை அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு தயாராகி விட்டது என்பதை இது காட்டுகிறார்.

குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வு முறையை வாபஸ்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்