மதுரை:
நாம் தமிழர் கட்சியான எங்கள் மீது வழக்கு போட்டால் அதிகாரத்துக்கு வந்தால் கொன்றுவிடுவேன் என சீமான் கொந்தளித்துள்ளார்.
மதுரையில் நடந்த மாவீரர் நாள் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், நாம் தமிழர் கட்சியின் போஸ்டர்களை கிழிப்பவர்களும், தம்பிகள் மீது வழக்கு போடுபவர்கள் எல்லோரும் தாம் ஆட்சிக்கு வருவதற்குள் இறந்துவிடுங்கள் என்றும், இல்லையேல், அவர்களை கொன்றுவிடுவேன் என்றும் அவர் பேசியுள்ளார்.
மேலும், தங்கள் மீது வழக்கு போடுபவர்கள் மற்றும் போஸ்டர்களை கிழிப்பவர்களின் பட்டியலை எடுத்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.