சென்னை:
நான் சொல்லும் யோசனைகளை ஆந்திர முதல்வர் தான் செயல்படுத்தி வருகிறார் என சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், நான் சொல்லும் யோசனைகளை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தான் செயல்படுத்துகிறார். ஆந்திர முதல்வர் எனது புத்தகத்தை வைத்திருப்பார் என நினைக்கிறேன் எனவும், நான் சொன்னது போல் ஜெகன்மோகன் ரெட்டி காவலர்களுக்கு விடுமுறை கொடுத்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.