ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் தலைமை பாதுகாப்பு அமைச்சரை மர்ம நபர்கள் சரமாரி கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் தலைமை பாதுகாப்பு அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான விரண்டோ, அந்நாட்டின் பன்டென் மாகாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அவரை வரவேற்க அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். அப்போது, இரு மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தினர். தடுக்க முயன்ற அதிகாரிகளையும் தாக்கினர். நிலைக்குலைந்த விரண்டோ ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
இதனையடுத்து, படுகாயமடைந்த விரண்டோவை பாதகாப்புப் படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.