பெங்களூரு:
கர்நாடக அரசு கவிழும் நிலையில், பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் தடை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலோக்குமார் கூறுகையில், பெங்களூரு முழுவதும் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள பப்புகள் மற்றும் மதுபானக் கடைகள் வரும் 25ம் தேதி வரை மூடப்படும் எனவும், இந்த விதிமுறைகளை யாராவது மீறினால் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.