கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அரசாணை வெளியீடு

  • In Chennai
  • September 17, 2019
  • 175 Views
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அரசாணை வெளியீடு

சென்னை:

சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

சென்னை பேரூரில் ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்து கடல்நீரை குடி நீராக்கும் 3வது திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், 400 எம்.எல்.டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக ரூ.6078 கோடியே 40 லட்சம் மதிப்பில் புதிய திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே, சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் 2 திட்டங்கள் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்