காஞ்சிபுரம்:
கடல்நீரை குடிநீராக்கும் 2வது திட்டத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், நெமிலியில், ரூ.1,689 கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது நிலையத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.
இந்த 2வது ஆலை, நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திறன்கொண்டது.