பள்ளி சிறுவர்களை கடத்திய போதை ஆசாமி

பள்ளி சிறுவர்களை கடத்திய போதை ஆசாமி

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் ஏரிமேட்டை சேர்ந்த வீரன் என்பவரின் பிள்ளைகளான தனுஸ்ரீ, அருண் ஆகியோர் அனுப்பம்பட்டில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வழியில் வந்த இளைஞர் ஒருவர் தான் இறக்கி விடுவதாக கூறி இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளார்.

அப்போது பள்ளியை தாண்டி சென்றதை சில மாணவர்கள் ஆசிரியரிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஆசிரியர்கள் மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் கிராம மக்களுடன் சேர்ந்து தேடியுள்ளனர்.

3 மணி நேரத்துக்கு பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை கண்ட கிராம மக்கள் சிறுவர்களை மீட்டனர்.

அப்போது அந்த வாலிபர் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இளைஞரை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்