நடந்து சென்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி

  • In Chennai
  • September 17, 2019
  • 180 Views
நடந்து சென்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி

சென்னை:
சென்னை முகலிவாக்கத்தில் 14 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் தீனா 14, என்ற சிறுவன் தன்னுடைய நண்பனுடன் நடந்து சென்றபோதுதான் அந்த பரிதாப நிகழ்வு நடந்துள்ளது.

மாநகராட்சி சார்பில் குடிநீருக்காக சாலையில் பள்ளம் தோண்டியுள்ளனர். பின்னர் வேலை முடிந்தவுடன் சரியாக பள்ளங்களை மூடாமல் சென்றுள்ளார்கள்.

அப்போது சாலையில் இருந்த மின் வயர் வெளியே வந்துள்ளது. அது தெரியாமல் பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் கால் வைத்த சிறுவன் தீனா மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக மின்சார வாரியம் மற்றும் காவல் துறையினருக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் 2 மணி நேரம் தாமதமாகவே மின்வாரிய அதிகாரிகள் வந்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் தெருவிளக்கிற்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து ஒரு மாதத்திற்கு மேலாவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏதேனும் வீடுகளுக்கு செல்லும் மின் வயர்களில் கசிவு ஏற்பட்டு அதன் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மின்வாரிய உதவி பொறியாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்