சைக்கிளில் சென்ற மாணவனிடம் அபராதம் கேட்ட போலீஸ்

சைக்கிளில் சென்ற மாணவனிடம் அபராதம் கேட்ட போலீஸ்

ஏரியூர்:
தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் தனது சைக்கிளில் சென்ற பள்ளி மாணவனை நிறுத்தி அபராதம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பென்னாகரம் அடுத்து ஏரியூர் உள்ளது. இந்த ஊரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது பள்ளி மாணவன் ஒருவன் சைக்கிளில் வந்துள்ளான். அவனை நிறுத்திய போலீஸ் சைக்கிளை ஓரமாக அழைத்து சென்று நிறுத்தினார்.

இதனால் பதறிய மாணவன் செய்வதறியாமல் திகைத்து நின்றான். இது பற்றி தனது பெற்றோர்களுக்கு மாணவன் தகவல் கொடுத்துள்ளான்.

மாணவன் தன்னை விடும்படி கூறியுள்ளான். ஆனால் போலீசார் காதில் வாங்கவில்லை. இதனையடுத்து ஒரு மணி நேரமாக மாணவன் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தான்.

அதன் பின்னர் மாணவனை போலீசார் விடுவித்தனர். சைக்கிளில் சென்ற மாணவனை நிறுத்திய போலீசாருக்கு பொதுமக்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்