சென்னை:
தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறையை வரும் 3ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலையொட்டி, தமிழகத்தில் பள்ளிகள் வரும் 2ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்குகள் 2ம் தேதி எண்ணப்படுவதால், அன்றைய தினம் நள்ளிரவையும் தாண்டலாம் என்பதால், 3ம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.