பள்ளி திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு

பள்ளி திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு

சென்னை:

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறையை நீட்டித்து, வரும் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை கடந்த 2ம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. ஆனால், உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 2ம் தேதி நடைபெற்றதால் இன்று வரை நீடிக்கும் என்பதால் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், அரையாண்டு விடுமுறையை மீண்டும் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜனவரி 6ம் தேதி திங்கட்கிழமை திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்