பாலியல் குற்றச்சாட்டு: பள்ளி தாளாளர் கைது

பாலியல் குற்றச்சாட்டு: பள்ளி தாளாளர் கைது

ஒசூர்:

ஓசூரில் 11 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தனியார் பள்ளி தாளாளர் குருதத் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநகரில் சாந்திநிகேதன் என்னும் தனியார் மெட்ரிக்பள்ளி இயங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஓசூர் பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புக்களாக தமிழ் பாடங்கள் மற்றும் கையெழுத்து பாடங்கள் நடத்தப்படுவதில் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றிருந்தனர்.

5ம் வகுப்பு மாணவியை கையெழுத்து வகுப்புக்களுக்கு அனுப்பி வைத்த தந்தை, அதேப்பள்ளியில் ஜோதிடம் குறித்த வகுப்பில் பங்கேற்றிருந்ததாக கூறப்படுகிறது.

5ம் வகுப்பு சிறுமி சாந்திநிகேதன் பள்ளியின் தாளாளர் குருதத்(60) என்பவரிடம் கையெப்பம் பெற அவரின் அறைக்குள் நுழைந்தபோது, குருதத் அறையை பூட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் அலறியடித்த மாணவி அறையை விட்டு வெளியேறி மற்ற ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

60 வயதான சாந்திநிகேதன் பள்ளி தாளாளர் குருதத், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 11 வயது தந்தையிடம், தெரியாமல் நடந்துவிட்டதாக காலில் விழுந்து மன்னிப்பு கோரிய உடன், திடீரென பள்ளியிலிருந்து மாயமாகி தலைமறைவாகி இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து மற்ற மாணவிகளின் பெற்றோர் குழந்தை நலவாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, பின்பு ஓசூர் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கினர்

மாற்று பள்ளியிலிருந்து சிறப்பு வகுப்பில் பங்கேற்க வந்த மாணவியை, 60 வயதான தாளாளரே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெற்றோர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தநிலையில், ஓசூர் மகளிர் போலிசார் தனியார் பள்ளியின் தாளாளரான குருதத் என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தியதில் பாலியல் பலாத்கார முயற்சி உண்மையென தெரியவந்ததையடுத்து, 60 வயதான குருதத் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்