காணாமல் போன பள்ளிக்குழந்தை மீட்பு

காணாமல் போன பள்ளிக்குழந்தை மீட்பு

சூளகிரி:

சூளகிரியில் காணாமல் போன பள்ளிக் குழந்தையை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி சாத்விகா. முதல் வகுப்பு படிக்கும் சாத்விகா என்ற பெண் குழந்தை இன்று காணாமல் போனது.

இந்த குழந்தை சூளகிரி கீழ் தெருவில் இருக்கும் இட்லி கடை அருகே சுற்றித்திரிந்த அந்த குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தகவலறிந்த பெற்றோர், பள்ளி நிர்வாகம் தகுந்த பாதுகாப்பு இல்லை எனவும், குழந்தைக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் என்ன செய்வது என போலீசில் புகாரளித்தனர்.

வழக்கப்பதிந்த போலீசார் பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரிக்க சென்றனர். அங்கு தலைமை ஆசிரியர் இல்லாததால் அடுத்த வாரம் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்