சென்னை:
அரசுப்பள்ளிகளில் 3, 4, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு ஜூன் 15ம் தேதிக்கு பிறகே பாடப்புத்தகங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 3ம் தேதி தமிழகத்தில் அனைத்துப்பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில், இன்னும் மாணவர்களுக்கு சரிவர பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை என புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்ஙகளை அறிமுகம் செய்ததால் புத்தகங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 3,4,5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 15ம் தேதிக்கு பிறகே பாடப்புத்தகங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.