புதுடெல்லி:
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்கள் பிராந்திய மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்புகளை இந்தி, கன்னடம் உள்ளிட்ட 6 மொழிகளில் மொழிபெயர்க்க உச்சநீதிமன்றம் முடிவுசெய்திருந்தது. இதில் செம்மொழியான தமிழுக்கு இடம் இல்லை என தகவல் வெளியாகியது.
இதனையடுத்து, மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்கள் பிராந்திய மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.