சென்னை:
நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தன்னுடைய கவனத்தையும் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
தற்போது நடைபெற்று வந்த இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘தர்பார்’ படத்தில் துவக்க பாடலை ரஜினிக்கு பிடித்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் பாட வேண்டும் என ரஜினி உத்தரவிட்டுள்ளார்.
கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் ‘மரண மாஸ்’ பாடலை எஸ்.பி.பி., பாடியுள்ளார். அவர் பாடினால் படம் வெற்றிபெறும் சென்டிமென்ட் அப்படியே தர்பார் படத்திலும் தொடர வேண்டும் என ரஜினி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.