ஐதராபாத்:
தெலங்கானா மாநிலத்தின் ஐதராபாத் விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக சவுதி அரேபியாவின் 3.5 லட்சம் மதிப்பு ரியால் நோட்டுகள் பிடிபட்டுள்ளன.
ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வுத்துறை நடத்திய சோதனையில், இனிப்பு, பிஸ்கட் பாக்கெட்டுகளில் சவுதி அரேபியன் ரியால் நோட்டுகளை கட்டுக்கட்டாக கண்டுபிடித்தனர்.
இதன் மதிப்பு 3,50,00 ஆகும். இதனை எடுத்துவந்த இருவரை மடக்கி பிடித்தனர். மேலும் அந்த நோட்டுக்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.