பிரச்சாரம் இன்றுடன் முடிவு

பிரச்சாரம் இன்றுடன் முடிவு

சென்னை:

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் முடிவடைவடையவுள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நாளை அனுப்பிவைக்கப்படும்.

தேர்தலை சுமூகமாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

மேலும் நாங்குநேரியில் திமுகவினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான மாவட்ட ஆட்சியரின் அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்