வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 4,014 வெப் கேமரா..!

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 4,014 வெப் கேமரா..!

சென்னை:

தமிழ்நாட்டில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 4,014 வெப் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், தமிழகத்தில் 45 மையங்களில் நடக்கும் 4,014 வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 17,128 அரசு அலுவலகர் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவர்.

வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஒப்புகை சீட்டு எண்ணப்படும். ஒவ்வொரு சுற்றுகளின் முடிவு வர 30 நிமிடங்கள் ஆகும். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும்.

அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதியில் 34 சுற்றுகள் எண்ணப்படும்; குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகள் எண்ணப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்