சதுரகிரி மலைப்பகுதியில் அன்னதானத்துக்கு தடை!

சதுரகிரி மலைப்பகுதியில் அன்னதானத்துக்கு தடை!

மதுரை:

சதுரகிரி மலைப்பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சதுரகிரி மலைக்கோவிலில் 24 மணி நேரமும் மடங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை நிறுத்த அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, தனியார் உணவங்களில் அதிக விலைக்கு உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளவதாக, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசார¬ணையில், சதுரகிரி மலைப்பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கூடாது எனவும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவோர் மலை அடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை பகுதியில் வனத்துறை சோதனை சாவடிக்கு வெளியே அன்னதானம் வழங்கிக் கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்