நள்ளிரவில் தலைகீழாக கவிழ்ந்த பஸ்..! 3 பேர் பரிதாப பலி..!!

நள்ளிரவில் தலைகீழாக கவிழ்ந்த பஸ்..! 3 பேர் பரிதாப பலி..!!

சாத்தூர்:

சாத்தூர் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 3 பேர் பலியாகினர். படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவின் பாலக்காடு அடுத்த கண்ணங்கோட்டை சேர்ந்தவர்கள் 70 பேர் ஒரு பஸ்சில் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் நேற்று கன்னியாகுமாரி, பத்மநாதபுரம் அரண்மனை மற்றும் கோவில்களை சுற்றிபார்த்துவிட்டு இரவு நேரத்தில் ஊருக்கு புறப்பட்டனர்.

இந்நிலையில், கோவில்பட்டி சாத்தூர் நெடுஞ்சாலையில், நள்ளிரவு 1 மணியளவில் வந்தபோது, சாலையின் ஓரம் இருந்த பள்ளத்தில் பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

பஸ்சில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் அந்த நள்ளிரவில் கூச்சலிட மக்கள் நடமாட்டம் இல்லாததால் தாமதமாக போலீசாருக்கு தகவல் சென்றது. இதனையடுத்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் அவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் பெட்டம்மாள், ரோஜினி, அப்புமணி மகள் நிகிலா ஆகிய 3 பேரும் பஸ்சின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பலர் காயங்களுடன் கூச்சலிட்டனர். அவர்கள் மீட்கப்பட்டு கோவில்பட்டி மற்றும் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்